×

ஏர்வாடி முதியோர் காப்பகத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா

நெல்லை: நெல்லை மாவட்டம் ஏர்வாடி முதியோர் காப்பகத்தில் ஏற்கனவே 24 பேருக்கு கொரோனா பரவிய நிலையில் ேநற்று  90 வயது முதியவர் உள்பட மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே முதியோர் காப்பகத்தில் தங்கியிருந்த 24 பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள மேலும் பலருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மேலும் 30 பேருக்கு கொரோனா பரவியது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருமே 65 முதல் 90 வயது  முதியவர்கள் ஆவர். இவர்களும் நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் மூன்றடைப்பில் உள்ள கோவிட்கேர் சென்டரில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குநர் வரதராஜன், ஏர்வாடியில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அனைவரும் வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு கூடுதல் கண்காணிப்புடன் சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


Tags : Corona ,Ervadi Retirement Home , Corona for 30 more at the Ervadi Retirement Home
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...