×

கர்தார்பூர் பாதை மீண்டும் திறப்பு பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கர்தார்பூர் பாதையை போக்குவரத்துக்காக மீண்டும் திறப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு செல்லும் யாத்ரீகர்கள் வசதிக்காக சாலை அமைக்கப்பட்டது இந்த சாலை கடந்தாண்டு நவம்பரில் திறந்து வைக்கப்பட்டது. கடந்த மார்ச்சில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, இந்த பாதையை பாகிஸ்தான் மூடியது.  

இதேபோல், கர்தார்பூர் பாதை வழியாக வருவதற்கு பாகிஸ்தானிய மக்களுக்கும் அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதனை தொடர்ந்து, மகாராஜா ரஞ்சித் சிங் நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜூனில் கர்தார்பூர் பாதையை பாகிஸ்தான் திறந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பகுதியை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை  மத்திய அரசு நிராகரித்து விட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து கர்தார்பூர் பாதையை திறப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

Tags : Pakistan ,Kartarpur ,route , Kartarpur, route, opening, Pakistan, announcement
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...