×

உ.பி இளம்பெண் பலாத்கார கொலையில் குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டாம்: போராட்டத்தில் டெல்லி முதல்வர் ஆவேசம்

புதுடெல்லி, :உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராசில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்கார கொலை விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சி மற்றும் பீம் ஆர்மி அமைப்பின் சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று மாலை கண்டன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் என்று எந்த மாநிலத்தில் நிகழ்ந்தாலும் சரி, அவர்கள் இந்தியாவின் மகள்களே.

எனவே, ஹத்ராஸில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்துள்ள கொடுமை நாட்டில் இனி வேறெந்த பெண்ணுக்கு நிகழக்கூடாது. ஹத்ராஸ் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்க்கிறது. எனவே இந்த விவகாரத்தில் யாரும் துளிக்கூட அரசியல் செய்யக்கூடாது. குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் யாரும் ஈடுபடாமல் அவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுதரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தங்களின் மகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட வேண்டும்’ என்றார்.

Tags : murder ,rape ,UP teenagers ,Chief Minister ,struggle ,Delhi ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...