கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கிராமசபை நடக்காததை கண்டித்து திருவள்ளூர் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களும் நேற்றுமுன்தினம் முதல் வீடு வீடாகசென்று கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது எனகூறிஅதற்கான துண்டு பிரசுரங்களையும் வினியோகித்தனர்.
கிராம சபை கூட்டத்துக்கான பல்வேறு பணிகள் நிறைவுற்ற நிலையில் எடப்பாடி அரசு திடீரென கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்தது. இதனால் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ 6 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரை செலவு செய்து வீணாகிவிட்டதாக கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட அவைத்தலைவர் பகலவன், உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.