×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 15,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.16 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 15,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,16,513-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 424 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 37,480-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 11,17,720 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 2,60,876 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Maharashtra , In Maharashtra, 15,591 people were diagnosed with coronavirus in a single day today
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!