கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உளிவீரணப்பள்ளி கிராமத்தில் வட மாநில சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளார் மாலிங்கா. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாலிங்காவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.