உ.பி: உ.பி.யில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கிராமத்துக்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற வாகனங்களை உ.பி. போலீஸ் தடுத்து நிறுத்தியதால் நடந்து செல்கின்றனர். கத்ராஸ் கிராமத்துக்கு செல்லும் ராகுல், பிரியங்காவுடன் ஏராளமான தொண்டர்களும் ஊர்வலமாக போகின்றனர்.