×

பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடாததுதான் இளம்பெண்கள் ஆசைவார்த்தையை நம்பி வெளியேறுவதற்கு காரணம்: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: காணாமல் போன 10ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தரக் கோரி, அவரது தாய் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோகும் இளம்பெண்கள் திருமணமானவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அரசுபதில் தருமாறு உத்தரவிட்டிருந்தனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே திருமணமான நபர்களின் சுயரூபம் மற்றும் உண்மை விவரம் தெரியாமல் இளம்பெண்கள், வீட்டை விட்டு வெளியேறுவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில்  இளம்பெண்கள் வீட்டை விட்டு சென்றதாக 53,898 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள், குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததும், அவர்களுக்கு உரிய அன்பும் பரிவும் கிடைக்க பெறாததும்தான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த விவாகரத்தில் மத்திய சமூக நலத்துறையை தாமாக முன்வந்து பதில் மனுதாரராக இணைத்த நீதிபதிகள், இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Tags : teenagers ,parents ,High Court ,children , Parents not spending time with children is the reason why teenagers rely on optimism: High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...