×

நூதன முறையில் வழிப்பறி

புழல்: மணலி கன்னியம்மன்பேட்டை வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் அஞ்சலி (54). செங்குன்றம் அடுத்த மொண்டி அம்மன் நகர் மார்க்கெட்டில் முருங்கைக்காய் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் ஆட்டோவில் வந்த 2 பேர்  அவரிடம் “உங்களை ஒருவர் கூப்பிடுகிறார். அங்கு செல்லும்போது, செயினை கழற்றி கையில் வைத்துக்கொண்டு செல்லுங்கள்” என கூறியுள்ளனர். இதனை நம்பிய அஞ்சலி தங்க செயினை கழற்றி கையில் வைத்துக்கொண்டு சென்றபோது, அவரைப் பினதொடர்ந்த மர்ம ஆசாமிகள் செயின் மற்றும் ரூ.500 ரொக்கத்தை அவரிடம் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Tags : Diversion in an innovative way
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...