சென்னை: விசிக தலைவர் திருமாவளவெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜ அரசு இந்திய பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்காகக் குழு ஒன்றை அமைத்துள்ளது. ஒரு நாட்டின் பண்பாட்டு வரலாற்றை எழுதுகிற வேலை அரசாங்கத்தைச் சார்ந்தது அல்ல. அரசு அமைக்கும் குழுவால் எழுதப்படும் வரலாறு நம்பகத்தன்மை கொண்டதாக இராது. பண்பாட்டு வரலாற்றை மாற்றி எழுதப் போகிறோம் என்று இப்பொழுது மத்திய அரசு குழு அமைத்திருப்பது தேவையற்ற ஒன்றாகும்.. மத்திய அரசு உடனடியாக இந்தக் குழுவைக் கலைக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.