×

சென்னையில் தனிமைப்படுத்தி கண்காணித்ததால் அரைமணி நேரமே நீட் தேர்வு எழுதியதாக மாணவி ஒருவர் புகார்

சென்னை: சென்னையில் தனிமைப்படுத்தி கண்காணித்ததால் அரைமணி நேரமே நீட் தேர்வு எழுதியதாக மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஒருவர் சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதினார். பரிசோதனையில் உடல் வெப்பம் அதிகமாக இருந்ததால் தனிமைப்படுத்தி தேர்வெழுத வைத்தனர். தனிமைப்படுத்தி கண்காணித்ததால் மன உளைச்சலில்  அரை மணிக்கு மேல் தேர்வெழுத முடியவில்லை. மாணவி புகாரையடுத்து தனியார் பள்ளி நிர்வாகத்துடன் அவரது பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எல்லோரையும் போலவே வியாசர்பாடி மாணவியையும் தேர்வெழுத அனுமதித்ததாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


Tags : student ,Chennai , A student complained that he wrote the NEED exam for half an hour because he was isolated and monitored in Chennai
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...