சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் தொடரை ஒளிபரப்ப தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்புக்கு தடை விதிக்க கோரி தீபா தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தலைவி படத்திற்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை கோரிய மேல்முறையீட்டு மனு செப்டம்பர் 28 ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.