×

பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டிய வழக்கு தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

சென்னை: வீட்டின் முன்பு அமர்ந்திருந்த பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டிய வழக்கில், தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது ெசய்தனர்.விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (40). இவரது மகன் தியாகு (15), பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 9ம் தேதி இச்சிறுவன் வீட்டின் முன்பு அமர்ந்து தனது செல்போனில் பேசி கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் சிறுவன் தியாகுவை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த தியாகு அலறியடித்து ஓடினான். தகவலறிந்து வந்த விரும்பாக்கம் போலீசார் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், விருகம்பாக்கம் ரத்தன் நகர் பகுதியை சேர்ந்த சுமன்ராஜ் (18), ஆழ்வார் திருநகர் பெரியார் நகரை சேர்ந்த சிவராமன் (21), ஆழ்வார் திருநகர் காமராஜ் தெருவை சேர்ந்த சிவராமன் (19) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் முன்விரோதம் காரணமாக வேறு ஒருவரை கொலை செய்யும் ேநாக்கில் அங்கு வந்ததும், அந்த நபர் இல்லாததால் ஆத்திரத்தில் பள்ளி மாணவனை வெட்டிவிட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேர் மீதும் ஐபிசி 294 (பி), 324, 506 (ii), 392, 427 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags : schoolboy , The case of a schoolboy being cut with a scythe 3 people who were in hiding were arrested
× RELATED வாலாஜா நகரில் சாலையில் கண்டெடுத்த ₹10...