×

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் திருவண்ணாமலைக்கு சென்ற முதல்வருக்கு கும்ப மரியாதை

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மேல் மருவத்தூரில் கும்ப மரியாதை செய்யப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, நேற்று காலை சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்த அவர், மேல்மருவத்தூர் வந்தார்.

அப்போது அவருக்கு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில், ஆன்மிக இயக்க நிர்வாகி செந்தில்குமார் தலைமையில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து சித்தாமூர் ஒன்றியம் அதிமுக செயலாளர் டாக்டர் பிரவீன்குமார், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர் விவேகானந்தன் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், முதல்வருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags : Chief Minister ,Thiruvannamalai ,Melmaruvathur ,Adiparasakthi Siddhar Peetha ,Kumbha , Melmaruvathur, Siddhar Peetham, Thiruvannamalai, Chief
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...