×

தென்தாமரைகுளத்தில் சானல் நிரம்பி ஊருக்குள் புகுந்த தண்ணீர்

தென்தாமரைகுளம்: தோவாளையில் இருந்து பொற்றையடி வழியாக வரும் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாயில் பொற்றையடியில் இருந்து பிரிந்து செல்கிறது வெங்கலராஜன் சேனல். இந்த சேனல் கரும்பாட்டூர், சாமிதோப்பு,  கோட்டையடி, ஆண்டிவிளை, சித்தன்குடியிருப்பு வழியாக தென்தாமரைகுளம் தெப்பக்குளத்திற்கு செல்கிறது. கடந்த சில தினங்களாக குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருவதால் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாயில்  அதிகளவு நீர் வருகிறது. இதனால் வெங்கலராஜன் சேனலிலும் அதிகளவில் நீர்வரத்து இருக்கிறது. இந்நிலையில் நேற்று ஆண்டிவிளை பகுதியில் சேனல் மூழ்கி அதிக அளவில் நீர் வெளியேறி அருவி போல் சாலையில் பாய்ந்தது.

இந்த தண்ணீரால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் முழுவதும் தண்ணீர்காடாக காட்சியளித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு  தகவல் கொடுத்ததனனர். அதிகாரிகள் வந்து சானலில் தேங்கியுள்ள கழிவுகள் முழுவதும் அப்புறப்படுத்தினர். இதனால் மாலையில் சானலில்  நீர்வரத்து சரி செய்யப்பட்டது.

Tags : town , water,overflowed ,channel ,Thendamaraikulam
× RELATED பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது...