×

`பார்’ ஆக மாறிய பெட்டிக்கடைகள்

கும்மிடிப்பூண்டி: தேர்வழி ஊராட்சியில் தேர்வழி கிராமம், கம்மாரபாளையம், ராகவரெட்டிமேடு, தம்புரெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டம்பேடு செல்லும் சாலை ஓரமாக அரசு மதுபான கடை சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. அப்போது  இருந்தே இந்த டாஸ்மாக் கடைய மூட வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள்  நடத்தி, அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில்,  இந்த டாஸ்மாக்கில் மதுபானங்களை வாங்கி தைலத்தோப்பு, வயல்வெளி, உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மதுவை அருந்துகின்றனர்.

இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு சில நேரங்களில் இடையூறு ஏற்படுகிறது. மேலும்,  கொரோனா பரவலால் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளது. இதனால், இந்த டாஸ்மாக்கிற்கு வரும் குடிமகன்கள் அங்கு உள்ள பெட்டிக்கடைகளில்  பிளாஸ்டிக் கிளாஸ்களை வாங்கி அங்கேயே மதுவை அருந்துகின்றனர். தற்போது, இந்த பெட்டிக்கடைகள் டாஸ்மாக் `பார்’ போல் மாறியுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் இளம்பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Box stores ,bar , Look, cabinets
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்