×

தனியார் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் மாணவர்களை கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் புகார் அளிக்கலாம்

காஞ்சிபுரம்: தனியார் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் புகார் அளிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை மீறி 40 சதவீதத்துக்கு மேல் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனை மீறி 40 சதவீதத்துக்கு மேல் கல்வி கட்டணம் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம்.

இதற்காக, ceokanchee puram@gmail.com என்ற மின்னஞ்சல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தங்களது புகார்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது முதன்மை கல்வி அலுவலர், காஞ்சிபுரம் என்ற அஞ்சல் முகவரிக்கோ உரிய ஆதாரங்களுடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags : schools , Private schools, fees, complaint
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...