×

திண்டிவனம் அருகே பரபரப்பு; பெண்ணை பலாத்காரம் செய்து கழுத்தறுத்து கொடூர கொலை: போலீசார் தீவிர விசாரணை

திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தலையணையால் அமுக்கி கத்தியால் கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விழுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி கன்னியம்மாள் (49). இவரது தங்கையை 2வது திருமணம் செய்த முருகன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களது மகன் மணிகண்டன் (25) கார் டிரைவராகவும், மகள் பொன்னி (24) தனியார் கல்லூரியிலும் வேலை செய்து வருகின்றனர். இருவரும் சென்னையில் தங்கியுள்ளனர்.

இதனால் கன்னியம்மாள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வேலைக்கு செல்வதற்காக அவரை அழைக்க வந்துள்ளார். அப்போது, கன்னியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தகவலறிந்து ரோஷனை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சடலம் அருகே கத்தி, சட்டை, மதுபாட்டில் ஆகியவை கிடந்தது. இதையடுத்து விழுப்புரத்திலிருந்து மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. அது 4 கிலோ மீட்டர் தூரம் ஓடியது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

போலீசார் கூறுகையில், கன்னியம்மாளை கொலையாளி பாலியல் பலாத்காரம் செய்து அவரது அலறல் சத்தம் வெளியே  கேட்காமல் இருக்கும் வகையில், முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி  அதன்பிறகு கொலை செய்துள்ளான். அவரது செல்போனை எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. பீரோவில் இருந்த செல்போன் பாக்சை மீட்டு, அதில் உள்ள ஐஎம்இஐ எண்ணை கொண்டு கடைசியாக கன்னியம்மாளிடம் யார் யாரெல்லாம் பேசினார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

Tags : Unrest ,Tindivanam ,death , Tindivanam, rape, brutal murder
× RELATED அனுமதியின்றி இ-சேவை மையம்: போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது