மதுரை : மதுரையில் உணவகத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ. 44 லட்சம் மோசடி செய்ததாக புகார் கூறப்படுகிறது. ஆரப்பாளையத்தில் ரமணா என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார் செந்தில் குமார். உணவகத்தில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி துரைபாண்டி என்பவரிடம் ரூ. 44 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.ஓட்டலில் பங்குதாரராக சேர்க்காமலும், பணத்தை திருப்பி தராமலும் செந்தில் குமார் ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.