×

ஆடு மேய்த்த பெண் கொலையில் வடமாநில இளைஞர் கைது

வாலாஜாபாத்: ஆடு மேய்த்த பெண்ணை கொலை செய்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர். வாலாஜாபாத் அடுத்த தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் இவரது மகள் சாந்தி (49) திருமணமாகாதவர். இவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆடு, மாடுகளை அதே பகுதியில் மேய்ப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்புஆடு மேய்க்கச் சென்ற சாந்தி மாலை வரை வீடு திரும்பவில்லை என வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பெண்டை சாலையில் முட்புதரில் பெண்சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் இறந்தவர் இப்பகுதியில் ஆடு,மாடு மேய்க்கும் சாந்தி என தெரியவந்தது.

இதனிடையே சாந்தி காணாமல் போன அன்று தாங்கி கிராமத்தில் ரைஸ் மில்லில் வேலை செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திரஜித் முக்கியா(25) மதுபோதையில் நடந்து சென்ற சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை பார்த்து   அப்பகுதியினர் வாலாஜாபாத் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வடமாநில இளைஞருக்கும் சாந்தி மரணத்திற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஆடு மேய்த்த சாந்தியை பலாத்காரம் செய்து கொலை செய்ததை அவன் ஒப்புக் கொண்டான். இதனை அடுத்து வாலாஜாபாத் போலீசார் இந்திரஜித் முக்கியாவை கைது செய்து, வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Northland ,shepherd girl , Shepherd, murdered, Northland youth, arrested
× RELATED சேலத்தில் பரபரப்பு சம்பவம் குட்கா...