×

உத்திரமேரூர் அருகே சோகம்: பைக் மீது பஸ் மோதி 2 சிறுவர்கள் பலி

உத்திரமேரூர்: பைக் மீது தனியார் பஸ் மோதியதில், பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் உத்திரமேருர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன். கூலித் தொழிலாளி. இவரது மகன் தனுஷ் (18). அதே ஊரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் ஸ்ரீவர்ஷன் (14). சிறுவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முறையே பிளஸ் 2, 8ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று இரவு தனுஷ், ஸ்ரீவர்ஷனை பைக்கில் அழைத்து கொண்டு சாலவாக்கம் நோக்கி புறப்பட்டான். பாண்டவாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சாலை வளைவில் எதிரே வந்த தனியார் கம்பெனி பஸ், பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 2 சிறுவர்களையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். இதில் வர்ஷன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தான். தனுஷ், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தான். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : boys ,Uttiramerur , Uttiramerur, bike, bus, 2 boys killed
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு