×

உசிலம்பட்டியில் கனமழையால் அசுவமா நதியில் வெள்ளம்.: வெள்ளத்தில் சிக்கிய தம்பதி பத்திரமாக மீட்பு

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அசுவமா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வயதான தம்பதியை தீயணைப்புத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர். உசிலம்பட்டியில் கனமழை பெய்ததால் அசுவமா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒத்தப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியகருப்பன்- லோகமணி தம்பதி வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.

தம்பதி வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் 108 ஆன்புலன்ஸ் ஊழியர்கள் வெள்ளத்தில் சிக்கி இருந்த தம்பதியை பத்திரமாக மீட்டனர். இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அமராவதி அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு 4,500 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.  

இதனைத்தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Tags : floods ,Usilampatti ,river , Heavy, rains ,Usilampatti ,floods ,Asuvama ,river
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...