×

பூசாரிக்கு கோயிலில் சிலை வைத்து வழிபடும் கிராம மக்கள்: விழுப்புரம் அருகே விநோதம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பூசாரிக்கு கோயிலில் சிலை வைத்து கிராம மக்கள் வழிபடும் விநோதம் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் அருகே தெளி கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காளம்மன் கோயில் பூசாரியாக தொண்டு செய்தவர் வரதராஜூலு. இவரின் பரம்பரையினரே இக்கோயிலுக்கு பூசாரியாக இருந்து வந்துள்ளனர்.இக்கோயிலின் பிரசித்திபெற்ற திருவிழா ஆண்டுதோறும் பங்குனிமாதம் நடைபெற்று வருகிறது.வரதராஜூலு தன் 96வது வயதில் அதாவது 2011ம் ஆண்டு  மறைந்தார். இவருக்கு பின் இவரது மகன்கள் கண்ணன், பக்தவத்சலம், அர்ஜூணன் ஆகியோர் தற்போது கோயில் பணிகளை செய்து வருகின்றனர். இக்கோயிலின் புனரமைப்புப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில் சிவன் கோயிலில் சிவலிங்கம், விநாயகர், நந்தி உள்பட பல சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் அருகே உள்ள பொது இடத்தில் சின்ன கோயில் ஒன்றில் வரதராஜூலு சிலை வைக்கப்பட்டு கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். தந்தைக்கு அவரின் வாரிசுகள் சிலை வைப்பது ஒன்றும் அதிசயமில்லைதான். ஆனால் அதனை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டு அனைவரும் வணங்குவது புதுமையாக இருந்தது. இது குறித்து கிராம மக்களிடம் கேட்டபோது, அவரின் பக்தியை கண்டு நாங்கள் ஆச்சர்யப்பட்டுள்ளோம். முக்காலத்தையும் உணர்ந்தவர் போல அவ்வப்போது அருள்வாக்கு சொல்வார். அவர் சொல்வது நடந்துள்ளது. அதனால் அவரையும் நாங்கள் வணங்குகிறோம். வயதில் மூத்தவர்களை வணங்குவதில் எவ்வித தவறும் இல்லை. அந்த வகையில் எங்கள் கிராமத்தில் மூத்தவரான இவரை வணங்குகிறோம் என்றனர்.


Tags : priest ,Villupuram ,Strange ,idol , Villagers, worshiping ,priest, idol ,temple,Villupuram
× RELATED விழுப்புரம் அருகே தற்கொலை...