ஹைதராபாத்: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ராகினியின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேரில் ஆஜராகுமாறு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியும் நடிகை ராகினி ஆஜராகவில்லை. நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவதாக ஓட்டல் ஊழியர் சங்கர் கொடுத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.