ரஞ்சி போட்டியில் ஏற்கனவே ரசிகர்கள் இல்லாமல் விளையாடிய அனுபவம் ஐபிஎல் தொடரில் கைகொடுக்கும். அணியில் 11 வீரர்கள் இருக்கின்றனர். வெறும் 2 வீரர்களை மட்டும் நம்பினால் மற்றவர்கள் என்ன விளையாடுவார்கள். ஆர்சிபி அணியின் முதுகெலும்பாக கேப்டன் விராட் கோஹ்லி, ஏபி டி வில்லியர்ஸ் உள்ளனர். அவர்கள் பல போட்டிகளை வென்று தந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவரை மட்டுமே நம்பி இல்லை. கடந்த தொடரில் ஹெட்மயர், குர்கீரத் சிங் ஆகியோரும் வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.