×

உளுந்தூர்பேட்டை அருகே பயங்கரம் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கொன்று எரிப்பு: மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொன்று எரித்தது தொடர்பாக மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் பாலமுருகன்(26), கொத்தனார். இவரது மனைவி மணிமேகலை(23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில். மணிமேகலை மீண்டும் கர்ப்பிணியானதால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அன்றைய தினம், குழந்தையை பார்க்க சென்ற பாலமுருகனை அதன் பின்னர் காணவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி திருநாவலூர் காவல் நிலையத்தில் மணிகண்டனின் சகோதரி கணவரான வேங்கூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ்(45) புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜி வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தார். காணாமல் போன பாலமுருகன் கொலை செய்யப்பட்டதாக வந்த தகவலை அடுத்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜிகுமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது பாலமுருகன் மனைவி மணிமேகலைக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன்(25) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மணிகண்டனை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் பாலமுருகனை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
போலீசில் மணிகண்டன், கொடுத்த வாக்குமூலம் வருமாறு:எனக்கும் மணிமேகலைக்கும் நீண்ட நாளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். கள்ளக்காதல் விவகாரம் பாலமுருகனுக்கு தெரியவந்ததால் எங்களை கண்டித்தார். இதனிடையே மணிமேகலைக்கு பிறந்த 2வது குழந்தை என்னுடைய (மணிகண்டன்) முக சாயலில் இருந்ததால் மருத்துவமனைக்கு வந்து பார்த்த பாலமுருகன், இதுதொடர்பாக மணிமேகலையுடன் சண்டை போட்டுள்ளார். இது குறித்து மணிமேகலை செல்போனில் என்னிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நான், பாலமுருகனை கொலை செய்ய திட்டமிட்டேன்.

சம்பவத்தன்று இரவு விழுப்புரத்தில் இருந்து வந்த பாலமுருகன் தனது வீட்டில் இருந்த போது அங்கு சென்ற நான், வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு பாலமுருகனை சுத்தியல், பித்தளை குடம் உள்ளிட்ட கையில் கிடைந்த ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினேன். இதில் மயங்கி விழுந்து பாலமுருகன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் ஒரு மொபட்டில்  பாலமுருகன் சடலத்தை சாக்குப்பையில் கட்டி எடுத்து சென்று சுடுகாட்டில் வைத்து எனது சகோதரர் தனசேகர் உதவியுடன் தீ வைத்து எரித்தேன். எஞ்சியிருந்த எலும்புகள், மண்டை ஓடுகளை கருங்கல் கொண்டு நொறுக்கி ஆற்று நீரில் வீசிவிட்டு சென்று விட்டேன்.இவ்வாறு வாக்குமூலத்தில் மணிகண்டன் தெரிவித்துள்ளார். வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலமுருகன் மனைவி மணிமேகலை(23), கள்ளக்காதலன் மணிகண்டன்(25), அவருடைய சகோதரர் தனசேகர் ஆகிய மூன்று பேரையும் போலீசார் நேற்று கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய சுத்தியல், பித்தளை குடம், மொபட் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். கள்ளத்தொடர்பால் தனது கணவரையே திட்டம் போட்டு கொலை செய்து எரித்த மனைவி மணிமேகலை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசில் புகார் அளிக்காத மனைவி
பாலமுருகன் மாயமானது தொடர்பாக அவரது மனைவி  மணிமேகலை போலீசில் புகார் அளிக்க வில்லை. அவரை தேடுவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. மேலும் எவ்வித கவலையும் இல்லாமல் இருந்துள்ளார். இது பாலமுருகனின் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, பாலமுருகனின் உறவினர் கோவிந்தராஜ் 5 மாதம் கழித்து டிசம்பர் மாதம் 14ம் தேதி திருநாவலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஒரு ஆண்டுக்கு பிறகு கொலையாளிகளை கைது செய்துள்ளனர்.



Tags : Ulundurpet , Husband, killed, arson, Ulundurpet,3 arrested, including ,wife, boyfriend
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...