சென்னை: முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஊரடங்கு காலத்தில் காசநோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு காசநோய்க்கான மருந்து மாத்திரைகள் இருப்பிடத்திற்கே சென்று வழங்கப்படுகிறது. 52,489 காசநோயாளிகளுக்கு மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.