×

பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி: டுவிட்டர் பதிவு மூலம் தகவல்..!!

பிரேசில் : பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, தற்போது அடுத்தகட்டமாக களப்பணியாளர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்களை தாக்கி வருகிறது.

இதற்கு முன்னர், உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சும் (செர்பியா), அவரது மனைவி ஜெலினாவும் கொரோனா வைரசின் பாதிப்புக்கு உள்ளானார்கள். சொந்த நாட்டில் நலநிதி கண்காட்சி டென்னிஸ் போட்டிகளை நடத்திய போது அதில் உரிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாததால் அவர்களை கொரோனா தொற்றிக் கொண்டது.

இதனையடுத்து, தற்போது பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மர், தற்போது பி.எஸ்.ஜி. எனப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தகவல் பி.எஸ்.ஜி. கிளப் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.எஸ்.ஜி. கிளப் அணி வீரர்கள் அனைவருக்கும் நாளை பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Neymar ,Brazil ,footballer ,Corona , Brazil, footballer, Neymar, Corona
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...