×

சென்னையின் எப்சிக்கு புதிய பயிற்சியாளர்

சென்னை: ஐஎஸ்எல் தொடரில் விளையாடும் சென்னையின் எப்சி கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ருமேனியாவை சேர்ந்த சிபா லாஸ்லோ நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒவன் கோயலே ஜாம்ஷெட்பூர் எப்சி அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றதை அடுத்து, புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் அணி நிர்வாகம் தீவிரமாக இருந்தது. 7வது சீசன் நவம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், புதிய பயிற்சியாளராக ருமேனியாவை சேர்ந்த சிசபா லாஸ்லோ (56) நியமிக்கப்பட்டு உள்ளார்.

ருமேனியா, ஹங்கேரி, மேற்கு ஜெர்மனி நாடுகளின் கிளப்களுக்காக விளையாடியவரின் முட்டியில் பலத்த அடிபட்டதால் 27வது வயதிலேயே ஓய்வு பெற்றார். பின்னர், 8 நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். அவரை 2020-21 என ஓராண்டுக்கு பயிற்சியாளராக சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.தற்போது ருமேனியோவில் உள்ள  சிசபா,  செப்டம்பர் மாத இறுதியில் நேரடியாக கோவா வந்து சென்னை அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tags : coach , Chennai, FC, new, coach
× RELATED தண்டவாளத்தில் மாடு வந்ததால் விபத்து...