×

மானாமதுரை பஸ் டெப்போ மூடல்? : வலைதள பரவலால் பரபரப்பு

மானாமதுரை:  மானாமதுரை சிப்காட் வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை தொடங்கப்பட்டது. இங்கு பஸ்களை நிறுத்தி வைக்கவும், பழுது பார்க்கவும், டீசல் நிரப்பவும் வசதிகள் செய்யப்பட்டன. காலப்போக்கில் இப்பணிமனையை மேம்படுத்த அரசு போக்குவரத்துக் கழகக் கும்பக்கோணம் கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பணிமனையில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. வளாகம் முழுவதும் புல் மண்டிப்போய் பாம்புகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் ஒரு சில டவுன் பஸ்கள் மட்டுமே இங்கு நிறுத்தப்பட்டு காலையில் எடுத்துச் செல்லப்பட்டன.  

பணிமனையை முடக்கிய காரணம் சொல்லப்படவில்லை. இந்நிலையில் இங்கு பணியாற்றிய டெப்போ செக்யூரிட்டிகள் இருவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு ஒருவர் மட்டும் பணியில் இருப்பதால் பணிமனையை மூட முயற்சி நடப்பதாக வாட்சப்பில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து கழக அதிகாரியிடம் கேட்டபோது, கொரோனாவால் டவுன் பஸ்கள் சிவகங்கை டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. பஸ் இயக்க உத்தரவு கிடைத்தவுடன் டெப்போ வழக்கம்போல் செயல்படும். பழுதுநீக்குதல், டீசல் நிரப்புதல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி பணிமனையை மேம்படுத்த சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட மந்திரி ஆகியோரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Tags : Manamadurai ,spread , Manamadurai ,bus depot, closure?, website
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...