×

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்

புதுடெல்லி: மூளையில் ரத்தக்கட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் நேற்று முன்னேற்றம் ஏற்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 10ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு  மூளையில் இருந்த ரத்தக்கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினார்கள். அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதும் உறுதியானது.

அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து அவர் கோமாவுக்குச் சென்றதால், வெ்ன்டிலேட்டர் மூலமாக் செயற்கை சுவாசம் அளித்து வருகின்றனர். இதற்கிடையில், நுரையீரலில் தொற்றும் கண்டுபிடிக்கப்பட்டதால் சிகிச்சையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, சிறுநீரக செயல்பாடுகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும், முகர்ஜி இன்னும் ஆழ்ந்த கோமா நிலையிலேயே இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Tags : Pranab Mukherjee , Pranab Mukherjee, Health, Progress
× RELATED இப்போது இருந்தால்...