×

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காஞ்சி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் வக்கீல் மதியழகன் தலைமை தாங்கினார். நகர தலைவர் இராம.நீராளன் முன்னிலை வகித்தார். கொரோனா பரவலை கட்டுபடுத்தாத மத்திய, மாநில அரசுகள், நீட், ஜெஇஇ நுழைவு தேர்வுகளை தள்ளி வைக்க வைக்கப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்க்காத மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டனர். இதில், நிர்வாகிகள் சம்பதி, கருணாமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயராமன், ரியாஸ், குமரவேல், சிவாஜி, சீனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு நகர தலைவர் ஜெ.பாஸ்கர் வரவேற்றார். முன்னாள் எம்பி விஸ்வநாதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாநில இலக்கிய அணி துணை தலைவர் புத்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : protests ,Congress ,state governments ,Demonstration , Federal, State Governments, Congress, Demonstration
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...