×

மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்கள் விரோத நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மத்திய அரசை கண்டித்து பொன்னேரியில்  எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொரோனா கொல்லுயிரி காலத்தில் மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்து விட்டு மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஏழை மருத்துவ மாணவர்களின் கனவை தகர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

ராஜாஜியால் கொண்டுவர முயற்சி செய்யப்பட்ட புதிய கல்விக் கொள்கையை ரத்துசெய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையால் வருங்கால தலைமுறை கல்வி பயில முடியாத சூழலுக்கு தள்ளப்படுவார்கள். சுற்றுச்சூழலை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கொண்டு வரப்படவுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை கைவிட வேண்டும். கிரிமனல் சட்டங்களில் மேற்கொள்ளப்படும் ஆபத்தான திருத்தத்தை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.


Tags : protest ,STPI ,SDPI ,government ,Demonstration , Federal Government, SDPI, Demonstration
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...