×

கொரோனா நோயாளி குடும்பத்துடன் எஸ்கேப்

சென்னை: கொரோனா தொற்று உறுதியான பயத்தில் 49 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சாலிகிராமம் காந்தி நகரை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க நபர், காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் அருகில் உள்ள சுகாதார மையத்தில் பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா ெதாற்று இருப்பது உறுதியானது. மருத்துவமனைக்கு தயாராக இருக்கும்படி சுகாதாரத்துறை ஆய்வாளர் ரமேஷ் செல்போனில் அழைத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி சுகாதாரத்துறை ஆய்வாளர் கொரோனா பாதித்த நபரை அழைத்து வர அவரது வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டப்பட்டு இருந்தது. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பிறகு வேறு வழியின்றி சுகாதாரத்துறை ஆய்வாளர் ரமேஷ் தலைமறைவான ெகாரோனா நோயாளியை கண்டுபிடித்து தரும்படி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ள கொரோனா நோயாளியை தேடி வருகின்றனர்.

Tags : corona patient ,patient ,Corona , Corona, patient, escape
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...