×

1962க்கு பிறகு லடாக் எல்லையில் மீண்டும் கவலைக்குரிய சூழல்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி: 1962 ல் நடந்த சீன போருக்குப் பிறகு லடாக் எல்லையில் மீண்டும் கவலைக்குரிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், குறிப்பிட்ட எல்லைப்பகுதியில், இந்திய - சீன படைகள் இதுவரை இல்லாத அளவுக்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரண்டு அண்டை நாடுகளுக்குள் நல்ல உறவு இருப்பதற்கான அடிப்படை,  எல்லையில் அமைதியும், சமாதானவும் நிலவுவதே என சீனாவிடம் தெளிவாக இந்தியா தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார். கடந்த காலங்களில் ராஜீய பேச்சுவார்த்தைகள் வாயிலாக எல்லைப் பிரச்சனைகளுக்கு முடிவு காணப்பட்டன என்றும் கூறியுள்ளார்.



Tags : Jaisankar ,Ladakh ,border , Jaisankar, Ladakh
× RELATED வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள்...