புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 60 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 75,760 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,10,235 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,023 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,472 ஆக உயர்ந்தது.
.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 56,013 பேர் குணமடைந்துள்ளனர்; இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 25,23,772 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,25,991 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இந்தியாவில் கொரோனா உயிரிழப்ப்பு விகிதம் 1.83%; குணமடைந்தோர் விகிதம் 76.24% ஆக உள்ளது.
*நேற்று(ஆக.,26) ஒரே நாளில் 9,24,998 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,85,76,510 ஆக அதிகரித்துள்ளது
மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!
மும்பை : சிகிச்சை பெறுவோர் :173195 ; குணமடைந்தோர் :522427; இறப்பு : 23089
தமிழகம் : சிகிச்சை பெறுவோர் :52362; குணமடைந்தோர் :338060; இறப்பு :6839
டெல்லி : சிகிச்சை பெறுவோர் :12520 ; குணமடைந்தோர் :148897; இறப்பு : 4347
கேரளா : சிகிச்சை பெறுவோர் 22408 ; குணமடைந்தோர் :41690; இறப்பு : 257
கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :83627 ; குணமடைந்தோர் :211688; இறப்பு : 5091
ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :92208 ; குணமடைந்தோர் : 286720; இறப்பு : 3541