கேரளா: மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 70 பேர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட நிலையில் 65 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பேரின் உடல்களை தேடிவந்த நிலையில் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.