சென்னை : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சேலம், தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அரபிக்கடலில் தென்மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.