சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி.யின் உடல்நிலை மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில் மருத்துவமனை சார்பில் நேற்று அறிக்கை: அதில், ‘எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர், எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள், தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று, எஸ்.பி.பி.யின் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.