×

எஸ்பிபி உடல் நலம் பெற வேண்டி: சபரிமலையில் சங்கீத அர்ச்சனை

திருவனந்தபுரம்: பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நலம் பெற வேண்டி சபரிமலையில் ஊழியர்கள் சங்கீத அர்ச்சனையும், சிறப்பு பூஜையும் நடத்தினர்.
பிரபல   திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மருத்துவமனை யில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும்   ஏராளமானோர் பூஜைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  சபரிமலை ஐயப்பன்   கோயிலில் நேற்று காலை நாதஸ்வர சங்கீத அர்ச்சனைநடத்தப்பட்டது.தேவசம்போர்டு   ஊழியரும், இசை கலைஞருமான சுகுணன், கணேஷ், யதுகிருஷ்ணன் ஆகியோர் சங்கீத   அர்ச்சனை நடத்தினர்.

எஸ்பி  பாலசுப்பிரமணியத்தின் பிரபல பாடலான சங்கராபரணம்   பாடலை இசைத்தனர். கோயிலில்  கொடி மரம் அருகில் வைத்து இந்த சங்கீத அர்ச்சனை   நடந்தது. மேலும் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்  நலம் பெற வேண்டி சிறப்பு   உஷ பூஜையும் நடத்தப்பட்டது. சபரிமலையில் ஆவணி பூஜைக்காக கடந்த  16ம்  ேததி திறக்கப்பட்ட கோயில் நடை, பூஜைகள் முடிந்து நேற்று இரவு  சாத்தப்பட்டது. மீண்டும் ஓணம்  சிறப்பு பூஜைகளுக்காக வரும் 29ம் தேதி மாலை கோயில் நடை  திறக்கப்படும்.

Tags : SBP ,Sabarimala ,Sangeetha Archana ,SPB , SPB, Body, Sabarimala, Sangeetha Archana
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...