சென்னை: தமிழகத்தில் மேல்நிலை பள்ளி வகுப்புகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது துவங்கும் என தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்லூரிகளில் சேர்க்கை எப்போது என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த தனித்தேர்வரின் தந்தை தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.