சென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார். கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி. சுவாச பிரச்னை காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இது பற்றி எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறும்போது, ‘அப்பாவுக்கு வென்டிலேட்டர் இல்லாமல் இப்போது சிகிச்சை அளிப்பதாக வந்த தகவல் உண்மை இல்லை. அவருக்கு வென்டிலேட்டருடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர்கள் அருகில் இருந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள். ரசிகர்களின் பிரார்த்தனைகளால் அவர் சீக்கிரமே குணமாகி வருவார்’ என்றார்.