×

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய திருப்பம்!: ஸ்வப்னாவுடன் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று வந்தேன் என சிவசங்கர் வாக்குமூலம்..!!

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய திருப்பமாக  முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் தாம் ஸ்வப்னாவுடன் சேர்ந்து பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வரும் சிவசங்கர் ஐ.ஏ.எஸ். இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தினந்தோறும் புதிய புதிய தகவல்கள் வெளிவந்த வண்ண உள்ளன. அந்த வகையில் தற்போது, ஸ்வப்னாவுடன் துபாய் மற்றும் ஓமனுக்கு பலமுறை சென்று வந்ததாக அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் உள்ள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

2017-ம் ஆண்டு இருவரும் சேர்ந்து துபாய்க்கு சென்றுள்ளனர். பின்னர் 2018-ம் ஆண்டு ஓமனுக்கு சென்ற சிவசங்கர், ஸ்வப்னாவை சந்தித்து சில நாட்கள் இருவரும் ஒன்றாக அறையில் தங்கி உள்ளனர். தொடர்ந்து, மீண்டும் கேரளா திரும்பிய போது ஸ்வப்னா சுரேஷையும் உடன் அழைத்து வந்துள்ளார். இதையடுத்து, 2018-ம் ஆண்டு கேரள வெள்ள பாதிப்புகளுக்கு ஸ்வப்னா நிதி திரட்ட வளைகுடா நாடுகளுக்கு சென்றதும், மாநில வீடுகட்டும் திட்டத்திலும் பல கோடி ரூபாயை ஸ்வப்னா சுருட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது சிவசங்கர் அளித்துள்ள வாக்குமூலத்தால் கேரள தங்கக்கடத்தல் வழக்கு மேலும் சூடுபிடிக்கிறது.

Tags : Sivasankar ,Swapna ,Kerala , Kerala Gold Smuggling, Swapna, Sivasankar, Confession
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...