×

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை: மருத்துவமனை அறிக்கை

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அவர் சென்னை சூளைமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது தனது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் விரைவில் குணமாகி திரும்புவேன் என்றும் எஸ்.பி.பி கூறியிருந்தார். இதற்கிடையே அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அவரது உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்தது. தொடர்ந்து சிகிச்சைக்கு பிறகு நேற்று முன்தினம் அவர் கண் விழித்து பார்த்ததாகவும் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை சார்பில் நேற்று மாலை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவ நிபுணர்கள் உடனிருந்து அவரை கவனித்து வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : SBP , SBP, follow-up, intensive care, hospital report
× RELATED எஸ்.பி.பி குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்