பால்கர்: மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் செயல்பட்டு வரும் நந்தோலியா ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்று பால்கர் கலெக்டர் கைலாஸ் ஷிண்டே தெரிவித்துள்ளார்.