டெல்லி: மொரீசியஸ் அருகே கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கடலில் கசிவதைத் தடுக்க இந்தியா உதவி செய்துள்ளது. எண்ணெய் கசிவைத் தடுக்க விமானம் மூலம் 30 டன் தொழில்நுட்பக் கருவிகள், பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொரீசியஸ் நாட்டு அரசு கோரியதை அடுத்து இந்தியா உதவி செய்துள்ளதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.