திருவனந்தபுரம்:ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (16ம் ேததி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறக்கிறார். தொடர்ந்து அடுத்த ஓராண்டுக்கான பொறுப்பை தந்திரி கண்டரர் ராஜீவரர் ஏற்கிறார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடக்காது. 17ம் தேதி (தமிழ் ஆவணி, மலையாள சிங்ஙம் 1ம் தேதி ) காலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜை, அபிஷேகம், மண்டபத்தில் கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து வரும் 21ம் தேதி வரை பூஜைகள் நடக்கின்றன.