×

சிறப்பு புலனாய்வுக்காக 5 பெண் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 பேருக்கு உள்துறை அமைச்சர் விருது

சென்னை: சிறப்பு புலனாய்வுக்காக மத்திய உள்துறை அமைச்சரின் 2020ம் ஆண்டுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 5 பெண் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் சிறப்பு புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் 2020ம் ஆண்டுக்கான விருது மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் 5 பெண் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு: ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, புதுக்கோட்டை மாவட்ட கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா, நீலகிரி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலா ஆகிய 6 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : investigations ,persons ,inspectors , Special Investigation, 5 Female Inspectors, 6, Home Minister Award
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...