×

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு 14ல் விசாரணை

புதுடெல்லி: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தமிழக அரசு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கில், “ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் கிடையாது. அதனால் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்த புதிய சட்ட வரையறைகளை உருவாக்க வேண்டும். அடுத்த 3 மாதங்களில் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மேல்முறையீடு மனு கடந்த 4ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில்,உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், அடுத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்த சட்ட வரையறை உடனடியாக உருவாக்கி இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.


Tags : In medical study, reservation, 14th, trial
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...