×

மெல்ல மெல்ல குறையும் கொரோனா...! தமிழகத்தில் புதிதாக 5875 பேருக்கு பாதிப்பு; ஒரே நாளில் 5,517 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 5875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,57,613-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54,735 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,364-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,45,629 -ஆக உயர்ந்துள்ளது.  மேலும் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,67,730 உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 5875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,96,483 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,517 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4,132- ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,065 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,01,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 122 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 56,998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 27,79,062 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 76.27% ஆக உள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60,344 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5875 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,56,140 ஆண்கள், 1,01,446 பெண்கள், 27 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ மகாராஷ்டிரா - 06
     
     ^ டெல்லி - 03

     ^ கேரளா - 05

     ^ கர்நாடகா - 14

     ^ ஆந்திரப்பிரதேசம் - 10

     ^ உதிர்ப்பிரேதேசம் - 08

     ^ புதுச்சேரி - 03

     ^ ஒடிஷா - 01

     ^ ராஜஸ்தான் - 01

     ^ பீகார் - 01

     ^ தெலுங்கானா - 04

* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

     ^ சவூதி அரேபியா - 07

     ^ சிங்கப்பூர் - 01

     ^ கத்தார் - 01

     ^ மலேசியா - 01

     ^ ஓமன் - 05

Tags : victims ,Tamil Nadu , Corona, vulnerability, discharge
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...